Sunday 30 October 2011

பெங்களூர் A R ரமணி அம்மாளும் சுசீலா ராமனும்!

முதலில் இந்த பாடலை பாருங்கள்...



ஐயகோ, நெஞ்சு பொறுக்குதில்லையே... இப்படி தமிழும் இசையும் சின்னாபின்னமாகி போவதை பார்க்க தானோ உயிர் வளர்த்தேன் - என்று உங்கள் மனம் கதறுகிறதா?

அப்படியானால் பெங்களூர் A R ரமணி அம்மாள் பாடிய ஒரிஜினல் பாடலை ஒரு முறை கேட்டு, மேலே பார்த்ததை மனத்திரையில் இருந்து அழிக்க முற்படுங்கள்.




திருவிழாக்களில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த ஒரு தமிழ் பாடலை உலக அரங்கில், ஒரு தொலைகாட்சி (ஜெர்மனோ பிறேஞ்சோ) பாடவைத்து மக்கள் கை தட்டும் அளவுக்கு கொண்டு சென்ற சுசீலா ராமனை ஒட்டு மொத்தமாக ஒதுக்க முடியவில்லை.

பாடலில் பல்லவிக்கும் சரணங்களுக்கும் இடையில் வரும் (interlude) வயலின் மற்றும் டிரம்ஸ் / தபேலா இசையும் ரசிக்க கூடியதாகவே இருக்கிறது.

கடைசியாக ஒரு பளீர் உண்மை. மேலே உள்ள இரண்டு பாடல்களையும் காட்டி எனது ஐந்து வயது மகளிடம் எது பிடித்திருக்கிறது என்று கேட்ட போது...

அவள் காட்டியது...

என்னப்பனே by சுசீலா ராமன். 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்து சகல வயதினரும் படிக்கக் கூடியவகையில் இருப்பதை உறதி செய்தபின் பிரசுரிக்கப்படும். நன்றி!

Your kind comments are published after moderation. Thanks!